தட்சிணாமூர்த்தியை மூலவராகக் கொண்ட கோயில் கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள சுகபுரத்தில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள மூலவரின் மீதுதான் ஆதிசங்கரர் ‘தட்சிணாமூர்த்தி அஷ்டகம் ’ இயற்றினார். சுகப்பிரம்ம மகரிஷிக்கு தட்சிணாமூர்த்தி ஞான உபதேசம் செய்தது இந்த இடத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. தமிழகத்தில் சென்னை திருவான்மியூரில் தட்சிணாமூர்த்தியை மூலவராகக் கொண்ட தனிக்கோயில் இருக்கிறது. இந்த தட்சிணாமூர்த்தியே தமிழகத்தில் மிக உயரமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல தேனி, முல்லை ஆற்றங்கரையில் தட்சிணாமூர்த்தியை மூலவராகக் கொண்டு தனிக்கோயில் உள்ளது.