ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணி முடிந்து தொழிலாளர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். வாசலில் ஒரு சிறுவன் தன் தந்தையைப் பார்ப்பதற்காக நின்றான். அதை அறிந்த ஒரு தொழிலாளி, தம்பி! இங்கே வருபவர்கள் எல்லோரும் ஹெல்மெட் போட்டிருப்பர். முகம் தெரியாது. உன்னால் உன் தந்தையை அடையாளம் கண்டுபிடிக்க முடியாதே! நீ வீட்டுக்குப் போ. அவர் அங்கே தானே வருவார், என்றார். பையன் மிக அருமையாக, “எனக்கு அவரைத் தெரியாது. ஆனால், அவருக்கு என்னைத் தெரியுமே!” என்றான். “அவர் (கடவுள்) நம்மை அறிந்திருக்கிறார். நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார். நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்,” என்கிறது பைபிள். ஆண்டவர் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்காக, நாம் பாவங்களைச் செய்யக்கூடாது. ஆண்டவர் மறைந்திருந்து நம்மைக் கவனிக்கும் மர்மத்தைப் புரிந்து கொண்டு, அவரிடம் பயத்துடன் இருக்க வேண்டும்.