பதிவு செய்த நாள்
08
ஜன
2018
10:01
சபரிமலை: மகரஜோதி தரிசனத்துக்கு பின் ஜன.,18-வரை நெய் அபிஷேகம் நடக்கும். ஜன.,20-ல் நடை அடைக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி தரிசனம் ஜன.,14-ல் நடக்கிறது. ஜன.,18- காலை 10:00 மணி வரை நெய் அபிஷேகம் நடக்கும். அன்று 11:30-க்கு தேவசம்போர்டு சார்பில் களபாபிஷேகம் நடக்கும். ஜன.,19- காலை 5:00 மணிக்கு நடை திறந்து உஷபூஜை, உச்சபூஜை, அத்தாழபூஜை நடக்கும். நெய் அபிஷேகம், களபாபிஷேகம் கிடையாது. அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கும் வரை பக்தர்களுக்கு தரிசனம் உண்டு. இரவு மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடக்கும். பின், பக்தர்களுக்கு சன்னிதானத்தில் அனுமதி கிடையாது.ஜன., 20- அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து அபிஷேகம், கணபதி ஹோமம் நடத்திய பின் பந்தளம் மன்னர் பிரதிநதி முன்னிலையில் நடை அடைக்கப்படும்.