பதிவு செய்த நாள்
10
ஜன
2018
12:01
திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, எல்.ஐ.சி., நிறுவனத்தின் மூலம், 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரிப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக, திருத்தணி எல்.ஐ.சி., கிளை நிறுவனம் சார்பில், 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்டது. இந்த இயந்திரம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று, நடந்தது. இதில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் எல்.ஐ.சி., நிர்வாகிகள் பங்கேற்று துவக்கி வைத்தனர். இந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு, 500 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திறன் கொண்டது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மலைக் கோவிலில் உள்ள, 50 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுண்டர் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் ஆகிய இடங்களில் வினியோகம் செய்யப்படும். ஏற்கனவே, திருத்தணி, பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் வழங்கி பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.