கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கூகலூரில் சிலாரூபமாக ஆறடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கூப்பிய கரங்களில் சிவலிங்கத்தை ஏந்தியவாறு இவர் காட்சியளிப்பது அபூர்வ அமைப்பாகும். பில்லி, சூனியம், திருமணத்தடை போன்றவற்றை நீக்குவதில் இந்த ஆஞ்சநேயர் வல்லவர் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது.