திருக்காவளூர் தலத்தில் அருள்பாலிக்கும் முத்துக்குமார சுவாமியை தரிசிக்க பன்னிரண்டு படிகள் ஏறவேண்டும். இந்தப் படிகள் 12 ராசிகளையும் மாதத்தையும் நினைவுபடுத்துபவையாகும். இதைத் தாண்டிச் சென்று முத்துக்குமார தம்பதியினரை தரிசிப்போருக்கு ஒரு மகாமகம் பார்த்த புண்ணிய பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.