சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
எல்லா மாதங்களிலும் கோலம் போடுகிறார்கள். மார்கழியில் போடும் கோலமே சிறப்பு. ஏனெனில் மார்கழியில் போடும் கோலத்திற்கு மும்மூர்த்திகளின் ஆசி கிட்டும். வெண்மை நிறத்தால் கோலம் போடுவது, பிரம்மாவை அழைக்கிறது. கோலம் போட்டபின் சுற்றிக் காவி (செம்மண்) நிறம் வரைவது சிவபெருமானை அழைக்கிறது. கோலத்திற்கு அழகு சேர்க்க நடுவில் பசுஞ்சாணம் வைத்து, மஞ்சள் நிறப் பூசணிப் பூவை வைப்பர். பசுஞ்சாணம் மகாலட்சுமியை குறிப்பதால் விஷ்ணுவை அழைக்கிறது. இவ்வாறாக மார்கழிக் கோலம் நம் இல்லங்களுக்கு மும்மூர்த்திகளையும் அழைப்பதாக முன்னோர் வகுத்து வைத்தது சிறப்பு.