திண்டுக்கல் மாவட்டம், குஜிலிப்பாறைய அருகே ராமகிரியில் அமைந்துள்ளது கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில், ஐம்பொன்னால் செய்யப்பட்ட சுமார் மூன்றடி உயரமுடைய அபூர்வ நந்தா விளக்கு இக்கோயிலில் உள்ளது. சிங்கத்தின் மீது ஒரு பெண் நிற்பது போன்று காட்சியளிக்கும் இவ்விளக்கில் பெண் உருவத்தின் தலைப்பகுதியில் ஒரு துவாரம் உள்ளது. இத்துவாரத்தில் எண்ணெய் ஊற்றினால் அது, தொப்புள் பகுதியில் உள்ள சொட்டி விளக்குக்கு வந்து சேரும் வகையில் விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சொட்டி விளக்கில் திரி ஏற்றப்பட்டு தொடர்ந்து எரியும். நந்தா விளக்கில் ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் எண்ணெய் வரை சேமித்து வைக்க முடியும்.