மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் திறந்த வெளியில் வன்னி மரத்தடியில் உள்ள விநாயகருக்கு அத்தி, நெல்லி, வில்வம், அரசு, பவளமல்லி, நாவல், வன்னி, வேம்பு, மந்தாரை ஆகிய ஒன்பது தல விருட்சங்கள் உள்ளன. இவற்றை ஒரே நேரத்தில் வணங்கினால், நவகிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.