காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனுறை சோமநாதர் கோயிலில் உள்ள நடராஜப் பெருமான் இரண்டு கால்களையும் பூமியில் உறுதியாக ஊன்றி சதுர தாண்டவத் தோற்றத்தில் காணப்படுகிறார். 105 தாண்டவத் தலங்களுள் முதன்மையானது இது என்பார்கள்.