பழநி முருகன் கோயிலில் ஐந்து நாட்கள் தங்கரத புறப்பாடு நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2018 01:01
பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் ஜன.,29 முதல் ஐந்து நாட்களுக்கு தங்கரத புறப்பாடு கிடையாது.பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு மேல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. இதற்காக அன்று மாலை 5 மணி வரை, ரூ.2 ஆயிரம் காணிக்கையாக செலுத்தி, பக்தர்கள் தங்கரதம் இழுக்கின்றனர். இந்த ஆண்டு தைப்பூசவிழா, ஜன.,25-ல் துவங்கி பிப்.,3 வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் மலைக்கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் ஜன.,29 முதல் பிப்.,2 வரை தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு கிடையாது என பழநி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.