Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ... நவநீதபெருமாள் கோயிலில் மார்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானசம்பந்தர் பாடல் பதிக கல்வெட்டு: நெல்லையப்பர் கோவிலில் உடைப்பு
எழுத்தின் அளவு:
ஞானசம்பந்தர் பாடல் பதிக கல்வெட்டு: நெல்லையப்பர் கோவிலில் உடைப்பு

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
12:01

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவில் சீரமைப்பு பணிகளின்போது, பழமையான கல்வெட்டை உடைத்து குப்பையில் வீசியதால், பக்தர்கள் வருத்தமடைந்துள்ளனர். திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில், 2004 ஏப்ரல் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, டி.வி.எஸ்., உள்ளிட்ட உபயதாரர்களின் முயற்சியால், 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெல்லையப்பர் சன்னதிக்கு அருகே, கச்சேரி விநாயகர் முன்புறம் உள்ள சுவர்கள் இடித்து புதிய பூச்சு நடக்கிறது. அந்த இடத்தில், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற பதிகங்களை, 1950ல், திருப்பனந்தாள் காசி திருமடம் சுவாமிகள், வெள்ளை பளிங்கு கல்லில் பொறித்து வழங்கியிருந்தார். அந்த கல்வெட்டுக்களை நேற்று நடந்த பணிகளின்போது உடைத்துவிட்டனர். அதன் உடைந்த பகுதிகளை, டவுன் ஆர்ச் அருகே உள்ள தாமரைக்குளம் குப்பை யில் வீசியுள்ளனர். இதைக் கண்ட சிவனடியார்கள் கொதித்தெழுந்தனர். பக்தர்கள் தரப்பில் கூறுகையில், ‘பழமையான சிவன்கோவிலின் தொல்லியல் சின்னங்களை தகர்க்கும் நோக்கோடு செயல்படுகின்ற னர். கல்வெட்டு இடிபடும்போது அதிகாரிகள் கவனித்திருக்கவேண்டும்’ என்றனர். கோவில் செயல் அலுவலர், ரோஷினியிடம் கேட்டபோது, ‘சுவரை இடித்து பூசும்போது, பழைய கல்வெட்டு உடைந்துவிட்டது,  அதே இடத்தில், மீண்டும் புதிய கல்வெட்டில், திருஞானசம்பந்தரின் பாடல் பொறித்து தருவதாக உபயதாரர் தெரிவித்துள்ளார். மற்றபடி அறநிலையத்துறை, தொல்லியல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டே பணிகள் நடக்கிறது’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar