விவசாயத்திற்கு துணை நின்ற சூரியன், மாடு, பணியாட்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விழா பொங்கல். சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார். கடல்நீரை ஆவியாக்கி மழை பொழிய செய்கிறார். கிருமிகளை அழித்து, ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார். அவருக்குரிய நாளாக இப்பொங்கல் நாள் அமைந்துள்ளது. சூரியனுக்கு தைப்பொங்கலும், கால்நடைகளுக்கு மாட்டுப்பொங்கலும், உறவினர், நண்பர், பணியாட்களை பாராட்டும் விதமாக காணும் பொங்கலும் அமைந்துள்ளன.