கிருஷ்ண பகவானால் சபிக்கப்பட்ட அவரின் மகன் சாம்பன், தொழு நோயிலிருந்து மீள, சந்திரபாகா நதிக்கரையில் சூரியபகவானுக்கு ஒரு கோயில் கட்டி வணங்கினார். அதுவே சூரியனுக்கு உரிய முதல் கோயில் எனப்படுகிறது. இது பாகிஸ்தானில் சந்திரபாகா என்றழைக்கப்பட்ட செனாப் நதிக்கரையில், முல்தான் என்ற நகரில் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.