தேவாரத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2018 05:01
தேவாரம்: தேவாரம் சின்னதேவி கண்மாய் கரையில் 800 ஆண்டுகள் பழமையான அவனாசி ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் போதிய பராமரிப்பின்றி பல ஆண்டாக இருந் ததால் சேதமடைந்தது. அதன் வெளிப்புற சுவரில் கண்ணப்ப நாயனார் உள்ளிட்ட புராண சம்பவ சிற்பங்கள் மற்றும் பிரமி எழுத்துக்களால் கோயிலுக்கான சொத்துகள் உள்ளிட்டவை பொறிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதற்கு அருகிலேயே சிறிய கோயில் கட்டி மூலவரை வைத்து அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. பழைய கோயிலை பழமை மாறாமல் சீரமைக்க 2014 ல் தேவாரம் தெய்வீகப்பேரவை தலைவர் நாகராஜன் தலைமையில் அவனாசி ஈஸ்வரர் அறக்கட்டளை துவங்கப்பட்டது. இதன் நிர்வாகிகள் மக்களிடம் நன்கொடை வசூலித்த கோயில் கட்டுமான பணிகளை துவக்கினர். எனினும் நிதி நெருக்கடியால் கட்டுமானம் சில காலம் தடைப்பட்டது. தற்போது முழு வீச்சில் நடக்கிறது.
அவனாசி ஈஸ்வரர் அறக்கட்டளை பொருளாளர் வி.நாகராஜன் கூறுகையில், ஊரின் ஈசான மூலையில் உள்ள சிவன் கோயில் பழுதடைந்து கிடந்ததால், பக்தர்கள் வேதனையடைந்தனர். ஆன்மிக பெரியோர்கள் இணைந்து கோயிலை மறு கட்டமைப்பு செய்ய முடிவு செய்தோம். கோயிலின் பழமை மாறாமல் புதுப்பிப்பதில் கைதேர்ந்த கும்பகோணத்தை சேர்ந்த ஸ்தாபதி அந்தோணிராஜ் சீரமைப்பு பணிக்கு நியமிக்கப்பட்டார். ஏழு அடுக்காக இருந்த கட்டுமான கற்க ளை சேதமில்லாமல் அகற்றினர். புராண, இதிகாச சம்பவங்களை அடிப்படையாக கற் களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உடைந்து விடாமல், ஏற்கனவே இருந்த இடங்களில் பொருத்தியுள் ளனர். கற்களை கொண்டு மேற்கொள்ளப்படும் கட்டுமானம் 80 சதவீதம் நிறை வடைந்து விட் டது. கோபுர பணி மற்றும் சுதை வேலைப்பாடுகள் மட்டுமே எஞ்சியு ள்ளன. பக்தர்களிடம் நன்கொடை வசூலித்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன, என்றார்.