குடிக்காமல் இருக்க.. மதுரை வீரன் கோயிலில் மது பாட்டில் படையல் செய்து உறுதி மொழி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2018 11:01
வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் இ.சித்துார் காலனியில் யாரும் மது குடிக்கக்கூடாதென இளைஞர்கள், மதுரை வீரனுக்கு மது பாட்டில்களை படையலிட்டு உறுதிமொழி எடுத்தனர். திண்டுக்கல் மாவட்டம் இ.சித்துார் ஆதி திராவிடர் காலனியில் 60 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் வழிபடும் மதுரை வீரன் கோயிலில் ஆண்டுதோறும் இளைஞர்கள் பொங்கல் வைத்து, கிடா வெட்டி, மது பாட்டில்களை படையலிட்டு வணங்குவர். பின்பு யாரும் மது குடிக்கக்கூடாது என உறுதி மொழி எடுப்பர். மது பாட்டில்களின் மூடியை திறந்து, மதுவை கீழே ஊற்றி மீண்டும் ஒரு முறை உறுதிமொழி எடுப்பர். அதன்பின்பு கிடாக்கறியை சமைத்து சாப்பிட்டனர். இதில் நடந்த பூஜையில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ற மது படையலிட்டு மது குடிக்க கூடாதென உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.