பதிவு செய்த நாள்
22
ஜன
2018
12:01
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அடுத்த, குப்பம்பட்டி சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதையொட்டி, கடந்த, 20ல், கிராம சாந்தி, நேற்று, விக்னேஷ்வரன், கோ, லட்சுமி - குபேரன், நவக்கிரக பூஜை நடந்தது. தொடர்ந்து, திரளான பக்தர்கள், காவிரியில் இருந்து கொண்டு வந்த புனிதநீரை, ஏரிக்கரை விநாயகர் கோவிலிலிருந்து, ஊர்வலமாக, சக்தி மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். இன்று, கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்கிறது.