Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அலங்காநல்லுார் தர்மசாஸ்தா கோயிலில் ... சமயபுரம் மாரியம்மன் தைத் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் சமயபுரம் மாரியம்மன் தைத் தெப்பத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை எமதர்மராஜன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
தஞ்சை எமதர்மராஜன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
03:01

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள எமதர்மராஜன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜனுக்கு தனிக்கோவில் உள்ளது.   சுமார் 700 ஆண்டுகளுக்கு பழமைவாய்ந்தது. தேவர்கள், சிவபெருமானை வேண்டுவதற்காகச் சென்றபோது, அவர் நிஷ்டையில் இருந்தார். அப்போது, மன்மதனை வரவழைத்து சிவனின் தவத்தை தேவர்கள் கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார். பின்னர், ரதிதேவியின் வேண்டுதலுக்காக மன்மதனை உயிர்ப்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுக்கப்பட்டு இருக்கும்போது, அதைச் செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார். சிவனும் அவ்வாறே அவருக்கு அருள்புரிந்ததாக புராண வரலாறு கூறுகிறது. இத்தகையை சிறப்புமிக்க கோவில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில மாதங்களாக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வந்தன. பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், கடந்த 19ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று. இதனை தொடர்ந்து இன்று(22ம் தேதி) காலை நான்காம் கால பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு முடிந்து, மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தீபாரதனையைத் தொடர்ந்து அருள் பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் மூலஸ்தானத்தில் 6 அடி நீளமுள்ள எருமை வாகனத்தில், 7.25 அடி உயரத்தில் எமதர்மராஜன் சிலையும், 9 பரிவார தெய்வங்களின் சிலையும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar