Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் ... உத்தரகோசமங்கை கோயில் பிரகார மண்டப பணி இழுத்தடிப்பு: பக்தர்கள் கோரிக்கை உத்தரகோசமங்கை கோயில் பிரகார மண்டப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் தைப்பூசவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் தைப்பூசவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
10:01

தஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோவில், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவில்களில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அறுபடை வீடுகளில் நான்காம்படை வீடாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புடையதும், ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தையாகிய சிவபெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசம் செய்த தலமாக விளங்குவது சுவாமிமலை. இக்கோவிலில் தைப்பூச விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மூலவர் சுவாமிநாதசுவாமிக்கும், உற்சவர் சண்முகசுவாமிக்கும் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சண்முகசுவாமி வள்ளி - தெய்வானையுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினார். அப்போது கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலைக்கோயிலில் இருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி வீதிவுலா நடைபெறுகிறது.

தொடர்ந்து வரும், 29ம் தேதி காலை, 9:15 மணிக்கு தேரோட்டமும், 31ம் தேதி தைப்பூச நாளன்று மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், தொடர்ந்து காலை, 10:௦௦ மணிக்கு காவிரியில் தீர்த்தவாரியும், வெள்ளி மயில் வாகனகத்தில் சுவாமி வீதிவுலாவும் நடைபெறவுள்ளது. திருவிடைமருதுார்: திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானதும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் அமையப் பெற்றதால், நட்சத்திர தோஷம் நீங்கும் தலமாகவும் விளங்குகிறது மகாலிங்கசுவாமி கோவில். இக்கோவிலில் தைப்பூச விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 30ம் தேதி காலை, 9:15 மணிக்கு தேரோட்டமும், 31ம் தேதி மதியம் காவிரியில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar