பதிவு செய்த நாள்
23
ஜன
2018
11:01
சிவகங்கை : சிவகங்கையில் பழமையான விசாலாட்சி அம்பாள் காசி விஸ்வநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட பழமையான இக்கோயில் கும்பாபிஷேக விழா ஜன. 17 கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. ஜன.19 மாலை முதல் யாகசாலை பூஜையும், ஜன., 21மாலை ஐந்தாம்கால யாகசாலை பூஜையும் நடந்தன. நேற்று காலை 5:30 மணிக்கு விநாயகர் வழிபாடும், ஆறாம்கால யாகசாலை பூஜையும் நடந்தன. காலை 7:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனையும், 8:00 மணிக்கு தத்வார்ச்சனை, நாடிசந்தானம் நடந்தன. காலை 9:00 மணிக்கு கடம் புறம்பாடும், 10:00 மணிக்கு மூலவர் விமானத்திற்கும், ராஜகோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சுப்ரமணியன், விநாயகர், ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டன. சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் மற்றும் மகஷே்துரை, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.