துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் திருவிழாவில் பொங்கல் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2018 12:01
வால்பாறை: வால்பாறை, நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் திருவிழாவில் நேற்று பொங்கல்பூஜை நெய்வேத்தியம் மற்றும் உச்சிகால பூஜை நடந்தது. வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் வடக்கு பிரட்டு. இங்குள்ள துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவிலின், 135ம் ஆண்டு திருவிழா கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று முன் தினம் அலங்கரிக்கப்பட்ட தேரில் துண்டுக்கருப்பராயர் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி நடுமலை தெற்கு டிவிஷனிலிருந்து கோவிலுக்கு திருவீதி உலா சென்று அருள்பாலித்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு பொங்கல் பூஜை, நெய்வேத்தியம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு சூலுார் பூசாரிகள் மற்றும் கொளப்பலுார் பூசாரிகள் தலைமையில் உச்சிகால பூஜை மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.