பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
உடுமலை: உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவில் சார்பில், பக்தர்கள், கடந்த, 25 ஆண்டாக, பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இந்தாண்டு, வரும், 26ம் தேதி, பாதயாத்திரையை, பல்வேறு காவடிகளுடன், பாலமுருகன் கோவிலில் இருந்து துவக்குகின்றனர். மாலை, 6:00 மணிக்கு, துங்காவி மாரியம்மன் கோவிலில், யாத்திரை குழுவினர், வழிபாடு நடத்துகின்றனர். அன்று, இரவு பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 27ம் தேதி, சண்முகநதி மற்றும் பழநி மலை அடிவாரத்தில், அன்னதானம் வழங்கப்படும். யாத்திரைக்கான ஏற்பாடுகளை, குருசாமியான சென்னியப்பன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.