பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
ஊத்துக்கோட்டை: பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டு வரும், யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதீஸ்வரர் கோவிலில், வரும், 28ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் அடுத்த, பெரியவண்ணாங்குப்பம் கிராமத்தில் உள்ளது, யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதீஸ்வரர் கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன் கோவிலை சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. பணிகள் முடிந்து, 28ம் தேதி, கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.இதையொட்டி, வரும், 26ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா துவங்குகிறது.மறுநாள், 27ம் தேதி, மங்கள வாத்தியம், திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, 28ம் தேதி காலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, வேள்வி பூஜை, காலை, 8:00 மணிக்கு, கலச புறப்பாடு, மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.