பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
சங்ககிரி: இளம்பிள்ளை அருகே, ரெட்டியூர், ஆதிசேஷ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இளம்பிள்ளை அருகே, ஏகாபுரம் கிராமம், ரெட்டியூர் பகுதியில் உள்ள ஆதிசேஷ பெருமாள் கோவில், தேவி, பூதேவி சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கடந்த டிச., 29ல், கணபதி ஹோமம், முகூர்த்த கால் நடுதல், 18ல், வாஸ்து சாந்தி ஹோமம் நடந்தது. நேற்று, கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. ஆதிசேஷ பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.