பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
குளித்தலை: கீழப்புதுப்பட்டி சக்தி விநாயகர், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. குளித்தலை அடுத்த கீழப்புதுப்பட்டியில், சக்தி விநாயகர், காளியம்மன் கோவில்கள் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை, முதல் கால பூஜையாக, விக்னேஸ்வர் பூஜை, லட்சுமி பூஜை மற்றும் நவகிரஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை இரண்டாம் கால, மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. அடுத்து, கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில், ஆர்.டி.மலை, ஆர்ச்சம்பட்டி, புழுதேரி, பில்லூர் பஞ்., பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாக்குழுவின் சார்பில், பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.