உடுமலை: உடுமலை, குளத்துப்புதுார் கிராமம் வீரமாத்தியம்மன் கோவிலில், நடந்த கும்பாபிேஷகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். உடுமலை அருகே, குளத்துபுதுார் கிராமத்தில் புகழ்பெற்ற வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. காலை, 7:30 மணிக்கு ரக்ஷாபந்தனம், வேதிகார்ச்சனையுடன் இரண்டாம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, தீபாராதனையுடன் திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 10:15 மணிக்கு, சிறப்பு பூஜைகளுடன் விநாயகர், வீரமாத்தியம்மனுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. வழிபாட்டுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், குளத்துப்புதுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.