பதிவு செய்த நாள்
05
பிப்
2018
12:02
நாகை: நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. இந்த அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் ராஜ், கல்யாணம் ஆகியோர் குறித்து சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகம விதிகளை மீறி இருவரும் செயல்பட்டு உள்ளதாக ஆதினம் குற்றம் சாட்டியுள்ளது.
மயிலாடுதுறையில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் உள்ளது. தேவாரபாடல் பெற்ற இக்கோயிலில் தட்சன் யாகத்திற்கு சென்றதால் சிவனை பி ரிந்த தாட்சாயினி, சாபத்தால் மயிலாக உருவெடுத்து மயிலாடுதுறையில் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து மீண்டும் சிவனை அடைந்த புராண வரலாறு கொண்டது. 3,78,913 ச துர அடிகொண்ட இந்த கோயில் 7ம் நூற்றாண்டை சோ;ந்தது. இந்த கோயிலில் மயூரநாதர் லிங்க வடிவிலும், வட பகுதியில் அபயாம்பிகை தனி சன்னிதியிலும் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. அபயாம்பிகைக்கு தினந்தோறும் 6 கால பூஜை நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு நாளும் அர்ச்சகர் மாறி மாறி பூஜை செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை தைவெள்ளி விசேஷமான நாள் என்பதால் அன்றைக்கு பூஜை நடத்திய ராஜ் என்ற அர்ச்சகர் செய்திருந்தார்.
மாலையில் நடைபெற்ற சந்தன காப்பு அலங்காரத்தின் போது அர்ச்சகர் அம்பாளுக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்துள்ளார். இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை கண்ட பக்தர்கள் தங்களது செல்போன்மூலம் சுடிதார் அணிந்த நிலையில் காட்சி தந்த அபாயம்பிகையை புகைப்படம் எடுத்துள்ளனர். ஒருசிலர் அந்த படத்தை தன் நண்பர்களுக்கு ஷேர் செய்துள்ளனர். தற்பொழுது அந்த புகைப்படம் வாட்சப், முகநூல் மூலம் வைரலாக பரவிவருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த புகா ரின் பேரில் அம்பாளுக்கு சுடிதார் அணிவித்த ராஜ் மற்றும் கல்யாணம் ஆகிய இரண்டு குருக்கள்களையும் திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அ ம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.