ராமேஸ்வரத்தில் மாசி சிவராத்திரி விழா: தங்க கேடயத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2018 11:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 3ம் நாள் மாசி சிவராத்திரி விழாவையொட்டி நேற்று காலை 4:00 மணிக்கு, கோயிலில் தங்க கேடயத்தில் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி உலா வந்தனர். பின், காலை 7:30 மணிக்கு கோயிலில் பூத வாகனத்தில் சுவாமி, பிரியா விடை அம்மன் மற்றும் கிளி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, கெந்தமாதன பர்வதம் புறப்பாடாகினர். இதனையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டது. பின் கோயில் ரதவீதி, திட்டகுடி வழியாக சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதத்தில் எழுந்தருளியதும், அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின் மாலை 6:00 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி இரவு 9:00 மணிக்கு கோயிலுக்கு வந்ததும் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை முடிந்ததும் மீண்டும் கோயில் நடை சாத்தப்பட்டது.