புதுடில்லி: நாது லா வழியாக கைலாஷ் மானசரோவர் செல்ல இந்திய யாத்ரீகர்களுக்கு சீனா அனுமதி அளித்துள்ளதாக பார்லி. லோக்சபாவில் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார். இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக இந்துக்கள் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் மத்திய வெளியுறவு இணைய அமைச்சர் வி.கே.சிங், பார்லி. லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக அளித்த பதில், டோக்லாம் விவகாரம் காரணமாக சீனாவின் நாது லா வழியாக செல்வதற்கான பாதையை சீனா கடந்த ஆண்டு மூடியது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் இரு தரப்பு வெளியுறவு அமைச்சர்கள் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பிரச்னை முடிக்கு வந்தது. இதையடுத்து நாது லா பாதை வழியாக செல்ல இந்திய யாத்ரீகர்களுக்கு சீன அனுமதித்தது என்றார்.