ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தமிழக கமாண்டோ போலீசார் நேற்று ஆய்வு நடத்தினர். மதுரை மீனாட்சியம்மன்கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தை தொடர்ந்து, தமிழக கமாண்டோ போலீசார் பல்வேறு கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் எதிர்பாராத விபத்துகள் மற்றும் தீவிரவாத தாக்குதலின் போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலும்நேற்று ஆய்வுப்பணி நடந்தது. நேற்று காலை 10:40 மணிக்கு ஆண்டாள் சன்னதி பிரகாரங்கள், உட்பகுதிகள் போன்றவை, வடபத்ர சயனர் சன்னதியிலும் கமாண்டோ போலீஸ் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் 15 பேர் ஆய்வு செய்தனர். கோயிலின் சுற்றுபகுதிகள், கண்காணிப்பு கேமரா செயல்பாடு குறித்து விசாரித்தனர்.கோயில் செயல்அலுவலர் நாகராஜன், டி.எஸ்.பி., ரவிசந்திரன் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் உடனிருந்தனர்.