பதிவு செய்த நாள்
09
பிப்
2018
12:02
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, ஆகாஷனை சொர்ண கால பைரவருக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடந்தது. சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியன்று, ஆகாஷனை சொர்ண கால பைரவருக்கு, பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு போன்றவைகளால் அபிஷேக பூஜை நடந்தது. பின், ஆகாஷனை சொர்ண கால பைரவருக்கு, ரோஜா, வடை மாலைகள் சாத்தப்பட்டது. சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகர் சன்னதியில் பூஜை செய்த பின், ஆகாஷனை சொர்ண காலபைரவருக்கு அர்ச்சனை செய்து, தீபா ராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பூசணி, எலுமிச்சை, கார்த்திகை போன்றவைகளில் விளக்கேற்றி கால பைரவரை வழிப்பட்டனர்.