மீனாட்சி அம்மன் கோயிலில் குவிக்கப்பட்டுள்ள விறகுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2018 01:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வன்னி மரத்தடி விநாயகர் வளாகத்தில் பல டன் விறகுகள் குவிக்கப்பட்டுள்ளன. விநாயகர் கோயில் பின்புறம் பிரசாத சமையல் கூடம் உள்ளது. அப்பம், லட்டு போன்றவை காஸ் சிலிண்டர் அடுப்பில் தயாரிக்கின்றனர். புளியோரை, பொங்கல் விறகு அடுப்பில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக வன்னி மரத்தடி விநாயகர் முன், பல டன் விறகுகள் குவிக்கப்பட்டுள்ளன. சமையல் அறையில் இருந்து பகல் முழுவதும் கரும்புகை வெளியேறி அருகில் உள்ள கலைநயமிக்க கோபுரங்கள், கோயில் உட் பிரகாரங்களில் பரவி மாசடைய செய்கிறது. தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் விறகால் பயங்கர சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சமையல் கூடத்தில் விறகு அடுப்புகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில் வளாகத்தில் இருந்த மரப்பலகைகளும் அகற்றப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன.