கோவை: கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோகா மையத்தின் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா, ஈஷா யோகா மையத்தில் வரும், 13 ல் துவங்குகிறது.
விழாவில் நேற்று (பிப்.,11) மாலை, சுருதி சடோலிகரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (பிப்.,12) வித்வான் ரவிக்கிரனின் சித்ர வீணை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (பிப்., 13) மகாசிவராத்திரியன்று, இரவு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு, ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்று ஆதியோகி பிரதட்சணமும் நடைபெறுகிறது. வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இசை நிகழ்ச்சிகளும், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, ஈஷாயோகா மையம் செய்து வருகிறது.