சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. 17-ம் தேதி வரை பூஜைகள் நடை பெறுகிறது. மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து ஜன., 20- அடைக்கப்பட்ட சபரிமலை நடை நேற்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.
மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றினார். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் ஆரம்பமாகும். 17 வரை தினமும் காலை 5:30 முதல் மதியம் 12:00 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். இவற்றுடன் களபபூஜை, உதயாஸ்தமனபூஜை, சகஸ்ரகலச பூஜை ஆகியவை நடைபெறும்.17 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நேற்று மாலை நடை திறந்தபோது பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. போலீசார் குறைந்த அளவில் இருந்ததால் பக்தர்களை ஒழுங்கு படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.