மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2018 12:02
தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா இன்று துவங்குகிறது. தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் ஒன்றாகும். இங்கு மகா சிவரத்திரி திருவிழா இன்று துவங்கி பிப். 17 வரை நடக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிப்பர். அவர்களின் வசதிக்காக தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தேனி, பெரியகுளம், வத்தலக்குண்டு, தேவதானப்பட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேவதானப்பட்டி அரிசிகடை பஸ் நிறுத்தத்தில் இருந்து கோயில் செல்வது ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த, ஆடை மாற்ற தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
தேவதானப்பட்டி பேரூராட்சி சார்பில் பணியாளர்கள் துப்புரவுப்பணியில் ஈடுபட்டுள்ளர். 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. * மகாசிவராத்திரியையொட்டி கிராமப்புற குலதெய்வ கோயில்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. அங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.