பதிவு செய்த நாள்
13
பிப்
2018
12:02
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை, அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, நேற்று தீ மிதிவிழா நடந்தது. தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 11 காலை, 7:30 மணிக்கு, கணபதி, சுப்பிரமணியர், அங்காளபரமேஸ்வரிக்கு ?ஹாமம், பூஜை நடந்தது.
இரவு, 7:00 மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு, தீ மிதிவிழா நடந்தது. பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு, அங்காளம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. இன்று மதியம், 2:00 மணிக்கு, திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். நாளை காலை, 9:15 மணிக்கு, பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், இரவு, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள், அம்மனுக்கு திருகல்யாணமும் நடக்கிறது. நாளை மறுநாள் அதிகாலை, 2:00 மணிக்கு, முகவெட்டு ஊர்வலம் நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு, அங்காளபரமேஸ்வரி அம்மன் அலங்காரத்துடன், பூதவாகனத்தில் மயானம் செல்லுதல் நடக்கிறது. வரும், 16ல், பல்லக்கு உற்சவமும், 17ல், பிள்ளைப்பாவு ஊர்வலமும் நடக்கிறது.