ஊட்டி,;ஊட்டி காந்தளில் அமைந்துள்ள காசி விஸ்வநாத கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த திரு விளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.இன்று, காலை, 7:00 மணிக்கு காலசந்தி பூஜை, 11:00 மணிக்கு உச்சி கால பூஜையை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மஹாயாக பூஜை நடக்கிறது. மாலை, 3:30 மணிக்கு மஹா பிரதோஷ அபிேஷகத்தை தொடர்ந்து மாலை, 5:30 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான மஹா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, சிவராத்திரி விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.