’பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனை பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இதில் சிவனை, ’பித்தன்’ என அழைக்க காரணம் என்ன தெரியுமா?சுந்தரருக்கு திருமணம் நடக்க இருந்த போது, ஆட்கொள்ள முதியவர் வேடத்தில் வந்தார் சிவன். சுந்தரரை தன் அடிமை என்றார். “ஏ பித்தனே! நீ யார்? என்ன உளறுகிறாய்?” என சுந்தரர் கோபித்தார்.
பின்பு தான் வந்தது சிவன் என்பது சுந்தரருக்கு புரிந்தது. தன்னைப் பாடும்படி சிவன் கேட்க, என்ன சொல்லி ஆரம்பிப்பது என குழம்பினார். ”என்னை பித்தன் என்று திட்டினாயே! அதிலேயே தொடங்கு” என்றார். சுந்தரரும் அதற்கான காரணத்தை புரிந்து கொண்டார். சிவனின் தலையிலுள்ள கங்கை, மூன்று முறை நம் பாவத்தை பொறுப்பாள். பார்வதியோ, எத்தனை முறை வேண்டுமானாலும், நம் பாவம் பொறுப்பாள். பொறுமையில் சிறந்த பார்வதியை, தலையில் வைத்து கொண்டாடாமல், மூன்று முறை பொறுக்கும், கங்கையை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார் சிவன். இப்படி பிறரால் புரிந்து கொள்ள முடியாதபடி செயல்படுவதால் ’பித்தன்’ என்றார் சுந்தரர்.