தேவாரம், மகாசிவராத்திரியை ஒட்டி தேவாரம் சாக்குலுாத்து மெட்டு வனப்பாதை வழியாக, கேரளாவில் உள்ள சிவபார்வதி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். இடுக்கி மாவட்டம் பாரத்தோடில் சிவபார்வதி கோயில் உள்ளது. இங்கு மகாசிவராத்திரியையொட்டி நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்க, பண்ணைப்புரத்தை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இந்தாண்டுக்கான சிவஜோதி தரிசன சிறப்பு பூஜையில் பங்கேற்க பெருமாள் தலைமையிலான குழுவினர் சாக்குலுாத்து வனப்பாதை வழியாக நேற்று சென்றனர். சாக்குலுாத்து மலையடிவாரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் இவர்களுக்கு, ஆன்மிகவாதி ராமராஜ் தலைமையிலான குழுவினர் குடிநீர், உணவு வழங்கினர்.