இஞ்சிமேடு பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் திருக்கோயில் மிகவும் பழமையானது. இத்தலத்தில் தாயார் சிங்க முகத்துடன் காட்சி அளிப்பது விசேஷம். இந்த தாயாருக்கு வேண்டிக் கொண்டு தினமும் நெய் தீபம் ஏற்றி ஒரு கொம்பு மஞ்சள், ஒரு ரூபாய் நாணயம் எடுத்து வைத்து 48 நாட்கள் கழித்து, மஞ்சளை மாலையாகத் தொடுத்து, சாத்தி, சேர்ந்த நாணயங்களை காணிக்கையாக செலுத்தினால் குறைகள் யாவும் தீரும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பதி ஐதிகம்.