திருவெண்காட்டிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சாயக்காடு. திருஞானசம்பந்தர் பாடித் துதித்த இத்தலம் எமபயத்தைப் போக்கி, உயிர்களுக்கு முக்தி தரும் மகிமை கொண்டது. ஈசன் சாயாவனேஸ்வரராகவும் அம்பிகை கோஷாம்பிகையாகவும் அருள்கின்றனர். வில்லேந்திய கோலத்தில் அபூர்வமான வேலனை இத்தலத்தில் தரிசிக்கலாம்.