சேலத்தில் ‘அரியனூர் ’ என்ற இடத்தில் ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. அதன் முன்பு நந்தியின் சிலையும், அடிவாரத்தில் பிரமாண்டமான விநாயகர் சிலையும் காணப்படுகிறது. ஏற்காடுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பலர் இந்த லிங்கங்களை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.