மைசூர் சாமுண்டீஸ்வரி தேவி கோயிலில், பாதுகாப்புக்காக உள்ள போலீஸார் தீபாராதனை நேரங்களில் துப்பாக்கியுடன் சன்னதிக்கு வந்து மரியாதை செலுத்தும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளன. இதுதவிர சண்டிஹோமம் நடக்கும் போதும், தசரா சமயத்திலும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு 21 முறை குண்டுகள் முழங்க காவலர்களால் மரியாதை செய்யப்படுகிறது.