திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோயிலில் ஐந்து மூர்த்திகள் மூலவர் அந்தஸ்தில் வணங்கப்படுகின்றனர். பிரதான மூலஸ்தானத்தில் வேங்கட கிருஷ்ணர்; முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான்; பிராகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதியில் இருக்கின்றனர். எனவே இத்தலம் பஞ்சமூர்த்தி தலம் என்றழைக்கப்படுகிறது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத் தலத்தில் மட்டுமே என்பது முக்கியச் சிறப்பாகக் கருதப்படுகிறது.