திருச்சி உறையூரில் பாளையம்பஜார் என்ற இடத்தில் கோயில் கொண்டுள்ள சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சகிதம் நான்கு முகங்களுடன் காட்சி தருகிறார். குடும்பப் பிரச்னைகளால் பிரிந்த தம்பதியர் இத்தல முருகப்பெருமானை ஏழு செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் விரைவில் ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை.