ஸ்ரீவி.,யில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2018 10:02
ஸ்ரீவில்லிபுத்துார்,: ஸ்ரீவில்லிபுத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் மகாசிவராத்திரியன்று, 87 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டி தெருவில் உள்ளது பத்ரகாளியம்மன் கோயில். இங்கு, சிவராத்திரியான நேற்று முன் தினம் இரவு 11:30 மணிக்கு, 87 வயது மூதாட்டி முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். கூடியிருந்த பக்தர்கள் குலவையிட்டு வணங்கினர். அதிகாலையில் அம்மனுக்கு அப்பங்கள் படைக்க, சிறப்பு பூஜை பின் பிரசாதமாக வழங்கப்பட்டது. தேனி, மதுரை, விருதுநகர், சென்னை உட்பட பல்வேறு பகுதி பக்தர்கள் பங்கேற்றனர்.