பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்தையடுத்து, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவில்களில், சிலைகளின் விபரம் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியில், அறநிலைய துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: அறநிலைய கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில், பஞ்சலோகம், தங்கம், வெள்ளி, கற்சிலைகள் உள்ளன. ஆய்வு பணி : அச்சிலைகளின் நிலை, பாதுகாப்பு தன்மை குறித்து, விபரம் கேட்கப்பட்டுள்ளது.பஞ்சலோக சிலைகளுக்கு மட்டும், அதன் உயரம், அகலம், எந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது, எடை உள்ளிட்ட விபரங்களை கூடுதலாக சேர்த்து அனுப்பும்படி, சென்னை, இந்து சமய அறநிலைய தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.இத்தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்க, செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவாரத்தில், பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆய்வு பணி தீவிரமாக நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.