திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2018 05:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பூக்களை கொட்டி அம்மனை தரிசித்தனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று துவங்கியது. கோட்டை மாரியம்மன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில், ஆண்டுதோறும் மாசித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று காலை 9:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், அம்மன் திருத்தேர்வீதியுலாவும் நடந்தது. அம்மன் பூத்தேரில் எழுந்தருளினார். தேர், மேற்குரத வீதி, கலைக்கோட்டு விநாயகர்கோயில், பென்ஷனர் தெரு, கோபால சமுத்திரம் தெரு, கிழக்குரத வீதி, தெற்குரத வீதி வழியாக சன்னதியை அடைந்தது. அம்மனை, பக்தர்கள் உதிரிப்பூக்களை கொட்டி தரிசித்தனர். அம்மனுக்கு புஷ்ப அபிஷேகம் நடந்தது.