Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 15 ... ராக்கப்பெருமாள் கோயிலில் பாரி வேட்டைத்திருவிழா ராக்கப்பெருமாள் கோயிலில் பாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
12:02

திருப்பூர்: பிளஸ் 2 மற்றும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலனுக்காக, திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் உள்ள, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு, நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில், மாணவர் நலன் கருதி, ஆண்டு தோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.மாணவர்களுக்கு நினைவாற்றலும், தன்னம்பிக்கையும், வெற்றியும் வழங்க வேண்டி, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம் நடத்தப்படுகிறது.

கடந்த வாரம், பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியருக்கு, கூட்டு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு சிறப்பு வேள்வி; 10:30 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு திருமஞ்சனம்; 11:00 மணிக்கு நாம சங்கீர்த்தனம்; 11:30 மணிக்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.நேற்றைய வழிபாட்டில், திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, 1,000க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். மாணவர் பெயர், நட்சத்திரம் பெயரில் அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது. ஹயக்ரீவர் வழிபாட்டில் பங்கேற்ற மாணவர்களுக்கு, ஸ்ரீஹயக்ரீவர் திருவுருவப்படம் மற்றும் வழிபாட்டு மந்திரம் அச்சிடப்பட்ட அட்டை, திருமஞ்சனப்பொடி, குங்குமம், அர்ச்சனை மலர் ஆகியன வழங்கப்பட்டன.‘இங்க்’ பேனா, பென்சில், ரப்பர், ‘ஷார்ப்னர்’, ‘ஸ்கேல்’ வைக்கப்பட்ட பென்சில் பாக்ஸ், யாகத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு, கையில் கட்டும் ரட்சையுடன்,

‘தினமலர்’ பட்டம் அச்சிடப்பட்ட பையில் வைத்து, பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சாம்பார் சாதம், தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. வரும், 25ல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. மாணவர்களும், பெற்றோரும், ஸ்ரீஹயக்ரீவர் வழிபாட்டில் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar