பதிவு செய்த நாள்
21
பிப்
2018
11:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது, காலையில், வெள்ளி விருஷபம் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், மூன்று ஆண்டுகளுக்கு பின், நேற்று காலை, 5:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, வெள்ளி விருஷபம் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7:30 மணிக்கு, தங்க மான் வாகனத்தில் உலா வந்தார். நாளை காலை, தங்க சிம்ம வாகனத்திலும், மார்ச், 2ல் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட தங்க காமகோடி விமானத்திலும், அம்மன் ஊர்வலம் நடக்கும். வரும், 3ல், விஸ்வரூப தரிசனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.